ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
எல்லாம் வதந்தி… அப்படி கிடையவே கிடையாது…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொல்வது எதை?
Radhakrishan IAS explanation
சென்னை:
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு முடக்கம் அமலுக்கு வரும் என்ற தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன.
ஆகையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி உண்டானது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தியே. அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.