fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

விளைநிலத்தை பார்த்து அதிர்ந்த விழுப்புரம் விவசாயிகள்…! காரணம் வெட்டுக்கிளிகள்!

Locust found in villupuram agricultural land

விழுப்புரம்:

விழுப்புரம் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக இருப்பதை கண்ட விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக வட இந்தியாவில் நுழைந்துள்ளன. அங்குள்ள விவசாய நிலங்களை நாசம் செய்தன.

தமிழகத்திலும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி பொன்பத்தி கிராமத்தில் வெட்டுக்கிளிகள் தென்பட்டுள்ளன. அவை பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ என்ற பீதியில் விவசாயிகள் வேளாண் துறைக்கு தெரிவித்துள்ளனர்.

நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சியாளர்கள் வட இந்திய பகுதிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள் கிடையாது என்றனர். ஆகையால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close