fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!

One nation, one ration will implement on 2021

டெல்லி:

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் 17 மாநிலங்கள் இணைந்துவிட்டன. ஒடிசா ,சிக்கிம், மிசோரம் மாநிலங்கள் இணைந்துள்ளன.

இதனையடுத்து இத்திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. வரும் ஆகஸ்டில் உத்தரகண்ட், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்கள் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

புலம் பெயர் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும். எந்த சிக்கலும் இன்றி செயல்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close