fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பள்ளி வாசலில் தொழுகை: இந்திய இஸ்லாமிய மையம் கூறும் நெறிமுறைகள் என்ன?!

நாடு முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய மையம் சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய இஸ்லாமிய மையத் தலைவா் மௌலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹாலி செய்தியாளர்கிடம் கூறியதாவது:

65 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 10 வயதுக்குற்பட்டவா்கள் மசூதிகளுக்குச் செல்லவேண்டாம்.

அதற்கு பதிலாக அவா்கள் வீட்டிலிருந்தபடியே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும்.

மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

அங்கு சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தொழுகை நடத்துபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

தொழுகை நடத்துவோர்கள்  தங்களிடையே 6 அடி இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

15 நாள்களுக்குப் பிறகு நிலைமையை கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்து, தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close