fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

12ம் வகுப்பு ரிசல்ட்டில் சிக்கல்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Minister sengottiyan about 12th result

சென்னை:

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அம்மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

12ம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிவடைந்து அதன் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் 12ம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்றும் பள்ளிகள் திறக்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close