fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்ட்டர்…! ஜம்முவில் பாதுகாப்பு படையினர் அதிரடி!

3 terrorist killed in jammu

டெல்லி:

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர்வாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று  தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை கொன்றதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஒருவர் இருப்பதாக  நம்பப்படுகிறது.

ஜூன் மாதத்தில் பள்ளத்தாக்கில் நடந்த பல்வேறு மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 48 பயங்கரவாதிகளைக் கொன்றனர், அவர்களில் பெரும்பாலோர் தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆவர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close