பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
Chief minister edapaddi palanisamy discussion
சென்னை:
கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் 31ம் தேதியுடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிகிறது. ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா, தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் இருந்தபடி அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிகிறது.
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனாவை பற்றி மக்கள் பயப்பட வேண்டாம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.