சின்னமனூர்–கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்..
கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம் ! சின்னமனூர் உழவர் சந்தை அருகே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. இந்த விடுதலையின் மகிழ்ச்சியை ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்டஒருங்கிணைப்பாளர்என்.ஆர்.சிவாஜிதலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன், நிர்வாகிகள் மணி, மதி மற்றும் பலர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், பொதுமக்களுடன் மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். நீதி கிடைத்தது ! உண்மை வென்றது!!கெஜ்ரிவால் வாழ்க! ஆம் ஆத்மி வெல்க! இந்தியா கூட்டணி வெல்க! சர்வாதிகாரத்தை ஒழிப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்! என்று முழக்கங்களுடன் , சின்னமனூர் முக்கிய நகர் பகுதிகள் மற்றும் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்திலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இனிப்புகளைப் பெற்றுக்கொண்டு கெஜ்ரிவால் வாழ்க ! என்று கெஜிரிவாலை வாழ்த்திய நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..