மன்மோகன் சிங் மறைவு தேசியக்கொடிஅரைக்கம்பத்தில்–7 நாட்கள் அரசு முறை துக்கம்.!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியா முழுவதும்அவரதுமறைவுபெரும்சோகத்தைஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவுக்கு மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.இதனையடுத்து இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 