fbpx
Others

CPS ஒழிப்பு இயக்கம் CPS ABOLITION MOVEMENT தேனி மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் தேனியில், திமுக – வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண்.309 – ன் படி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும்…

+ CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தியும்…

+ சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் 100% நிறைவேற்றப்பட்டதாக உண்மைக்கு மாறாக தமிழக முதல்வர் அறிவித்ததை எதிர்த்தும்…சிறை நிரப்பும் போராட்டம்27-12-2023, காலை 10.00 இடம் : நேருசிலை அருகில், தேனி  வாழ்வாதாரக் கோரிக்கையை வென்றிட சிறை நிரப்பும் போராட்டத்தில் களம் காண்போம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்திட உயிர் தந்தேனும் ஒற்றைக் கோரிக்கையை வென்றெடுக்க வேண்டுமெனக் களமாடி வரும் CPS ஒழிப்பு இயக்கத்தின் 61 -வது போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் எதிர்வரும் 27-12-2023-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத்திட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கும் இம்மகத்தான போராட்டத்தில் பாதிப்பிற்குள்ளாயிருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனத்தொழிலாளர்கள் கலந்து கொண்டநிகழ்ச்சி……… . ஆல் இந்தியா மீடியா கம்யூனிகேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் பாரதிய விவசாய மக்களாட்சி மாநில துணை அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close