fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைதேர்தல் ரத்து.!

திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

 

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைய இருந்தது. கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைதேர்தல் நடத்த கூடாது என்றும் இதனை ஒத்தி வைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close