fbpx
RETamil News

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 485-ஆக உயர்வு

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவது ஊரடங்கு மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து , பிற செயல்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க கேட்டுகொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த பல நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனாத்தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையுணரும் அரசும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close