கொரோனா ஆய்வுக்கு வந்திருக்கோம்…! கத்தியை காட்டிய கொள்ளை கும்பல்…! அப்புறம்…?
Chennai theft man arrested
சென்னை:
கொரோனா ஆய்வுக்காக வந்திருப்பதாக கூறி சென்னையில் மர்ம கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் லெனின். அவரது மனைவி செல்வி. லெனின் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த 2 பேர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா குறித்து கணக்கெடுப்பு நடத்த வந்திருப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்ட, செல்வி அவர்களை தள்ளி விட்டு கத்திக்கொண்டே வெளியே ஓடி இருக்கிறார். உடனே கொள்ளை கும்பல், வீட்டிற்குள் இருந்த லெனின் மகளிடம் உள்ள நகை, பணத்தை பறித்துக் கொண்டு பின்பக்கம் வழியாக தப்பித்தனர்.
இதுகுறித்து போலீஸார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அண்ணாசாலையை சேர்ந்த பாட்ஷா என்பவர் அவரது கூட்டாளிகளோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.