OthersRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு
இன்று 19 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்…!விரைவில் வெளியாகும் முடிவு!
Today Rajyasabha election
டெல்லி:
8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 5 பேர் போட்டியின்றி தேர்வாகிவிட்டனர்.
மீதியுள்ள 19 எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள் உள்ளன.
ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்பி இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து விட்டது. 19 இடங்களுக்குமான வாக்குப் பதிவு இன்று மாலை முடிந்து உடனே முடிவுகள் அறிவிக்கப்படும்.