fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

எந்த வயசுக்காரங்க, எத்தனை மணிக்கு வரணும்? சரக்கு வாங்க டாஸ்மாக் போட்ட அட்டவணை

Tasmac liquor sales timings

சென்னை: டாஸ்மாக்கில் எத்தனை மணிக்கு எந்த வயது கொண்ட நபர்கள் மதுபானங்களை வாங்க வரலாம் என்று டாஸ்மாக் அட்டவணை வெளியிட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதில் மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் நாளை முதல்  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில் எந்தெந்த வயதினருக்கு, எந்தெந்த நேரத்தில் மதுவிற்பனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை பின்பற்றினால் மதுபானங்கள் தரப்படும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும் மதுபானம் விற்கப்படும். 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close