ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸுக்கு வெற்றி பிரகாசம்!
ராஜஸ்தான் :
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பிரச்சனையை எழுப்பி, தனது 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்.
இது தமிழ்நாட்டின் கூவத்தூர் காட்சிகளை நினைவூட்டுவதாக இருந்தது.
இதனிடையே சச்சின் பைலட் பாஜகவுக்கு போய்விட்டார் என வதந்திகள் கிளம்பின. குதிரை வர்த்தகத்தில் பாஜக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன.
கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் இந்த பிரச்சினையை ராகுல் காந்தி தீர்த்து வைத்துள்ளார்.
சச்சின் பைலட் நேற்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து வெளிப்படையாக பேசினார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்னதாக சச்சின் பைலட் நாளை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வார், இதனால் இந்தப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
சிக்கலில் இருக்கும் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் நேருக்கு நேர் சந்திப்பார்கள். இதனால் நாளைய நிகழ்வை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறார்கள்.