ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
தென்மாவட்டங்களை நோக்கி மக்கள்…! வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
Vandaloor heavy traffic due to lockdown
சென்னை:
தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்ததால் வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
12 நாள் ஊரடங்கு காரணமாக நேற்றிரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமானவர்கள் வாகனங்களில் பறக்க ஆரம்பித்தனர்.
பலர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, மினி வேன், டெம்போ என கிடைத்த வாகனங்களில் பயணித்தனர். அதன் காரணமாக வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் காத்திருந்தன. இ பாஸ் பரிசோதனை இல்லாததால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.