தேர்தல் ஆணையம் அதிரடி–பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம்…
பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம் என்றும், பாமகவின் தலைவர்
அன்புமணிதான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாகதெரிவித்துள்ளது. பாமகவில் பிரச்னை தொடங்குவதற்கு முன்னராக உள்ள ஆவணங்களின் அடிப்படையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்ற முடிவுக்கு வந்ததாகும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணையம் இன்று மறு ஆய்வு தாக்கல் செய்து அது விசாரணைக்கு வந்தது தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவராக உள்ளார் என்றும் இதை ஏற்க மறுக்கும் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று வந்தால் மட்டும் தான் மாற்றங்களை செய்ய முடியும் என கூறிய வாதத்தை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பதிவு செய்து பதிவு செய்து மறு ஆய்வு மனுவை முடித்து வைத்தது இதை ஏற்க மறுத்த மருத்துவர் ராமதாஸ் தரப்பின் வழக்கறிஞர் ஆட்சேபனைகளையும் உத்தரவில் பதிவு செய்ய வேண்டும் என்று முறையிட்டார் அதையும் நீதிமன்றம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது(Breaking News)