Others
பெருந்தலைவர் மக்கள் கட்சி– தீபாவளி பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர். எம்விஎம்.ரமேஷ்தலைமைதாங்கினார். காமராஜ், செந்தில்குமார் முத்துலிங்கம், குமாரசாமி, செந்தில் குமார், முருககனி முன்னிலை வகித்தனர்.செய்திதொடர்பாளர். ஜி. சந்தானம் வரவேற்றார்..பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என்ஆர். தனபாலன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரையாற்றினார்.முன்னாள் அமைச்சர். மாதவரம். மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.புழல். ஏ. தர்மராஜ், வடகரை. மு. சுந்தர், எம். வைகுண்டராஜன், நளினி மகேந்திரன், ஆரோக்கியராணி உள்பட பலர் பேசினர்.முடிவில் தலைமை நிலைய செயலாளர். எம்ஆர். சிவகுமார் நன்றி கூறினார்.
