Others
பிரதமர் மோடி–தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் சிந்தூர் நடவடிக்கை.
தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் தான் சிந்தூர் நடவடிக்கை. வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்திலேயே பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தியாவுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் எதிரான சதிச்செயல்தான் பஹல்காம் தாக்குதல் என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார்.தீவிரவாதத்தை குழிதோண்டி புதைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது இந்தியா. தீவிரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை நடத்துவதற்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் மூலை முடுக்கெல்லாம் இருந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இப்படியான தாக்குதல் நடக்கும் என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்”