பிரியங்கா–வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவிப்பு…
தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து முடிவு செய்ய இன்றுதான் கடைசி நாள்.இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்,பிரியங்கா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் கார்கேகூறியதாவது: விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியில் மட்டுமே ராகுல்எம்.பி.யாக நீடிக்க முடியும். மற்றொரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏனெனில் அந்த தொகுதி நீண்ட காலமாக காந்தி குடும்பத்துக்குமிகவும் நெருக்கமாக இருந்துவந்துள்ளது. அதேநேரம்ராகுல்காந்திமீதுஅன்புவைத்துள்ளவயநாடுமக்கள்,அந்ததொகுதியைராகுல்தக்கவைத்துக்கொள்ளவேண்டும்எனவிரும்புகின்றனர். விதிமுறைகளில் அதற்கு இடமில்லை. எனவே, நீண்டஆலோசனைக்குபிறகு,வயநாடுதொகுதிஎம்.பி.பதவியைராகுல்ராஜினாமாசெய்யவேண்டும்எனமுடிவுசெய்யப்பட்டுள்ளது.வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வும்முடிவுசெய்யப்பட்டுள்ளது..இதற்குஅவர்ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வாறுகார்கேதெரிவித்தார்.இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறும்போது, “ராகுல் ராஜினாமா செய்துவிட்டாரே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்படாத அளவுக்கு கடுமையாக பணியாற்றுவேன்” என்றார்.இதுகுறித்து ராகுல் கூறும்போது, “என் மீது அன்பு செலுத்திய வயநாடு மக்களுக்கு நன்றி.தொடர்ந்து வயநாடு செல்வேன்” என்றார்.