Others
தேனி உத்தமபாளையம் தாலூகாபேரணி.!!
உத்தபாளையத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி.!!
தேனி மாவட்டம். ஜூன். 26. உத்தமபாளையம் தாலூகா காமயக்கவுண்டன் பட்டியில் பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலும் பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா முன்னிலையில் 15 வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டு மீண்டும் மஞ்சப்பை புழக்கத்தை முன் மொழிந்தனர் . நெகிழப்பையை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினர் மற்றும் 2வது வார்டு வடக்கு வெளி வீதியை தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்தனர் மேலும் மேற்பார்வையாளர் ஜெகநாதன் மஸ்தூர் பணியாளர்களை கொண்டு மஞ்சள் பை பயன்படுத்த பொது மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டினார்கள் பேரூராட்சி பரப்புரையாளர்கள் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.