Others
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து….

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட, கர்நாடகா மாநிலம் ஹாசனில் இருந்து சோளம் ஏற்றிய லாரி பெருந்துறைக்கு புறப்பட்டது லாரியை ஹாசனை சேர்ந்த பிரகாஷ் (வயது 40) என்பவர் ஓட்டினார். சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 2-வது சுற்று வளைவு அருகே நேற்றுக்காலை வந்தபோது எதிர்பாராதவிதமாகநிலைதடுமாறி நடுரோட்டில்கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்