fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கொரோனா தடுப்பு பணி…! 10 முதலமைச்சர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை!

Pm Modi discusses with 10 CM

டெல்லி:

கொரோனா தொடர்பாக பிரதமர்  நரேந்திரமோடி  தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில்  கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இன்று  தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close