fbpx
GeneralRETamil Newsஉலகம்

மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை..! ரஷ்யா சாதனை!

Russia made human trials for corona vaccine

மாஸ்கோ:

முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் உள்ள பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளன. இந் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மனிதர்கள் மீதான சோதனை முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா அறிவித்துள்ளது

மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக கொரோனா தடுப்பு மருந்தை சோதனையை ரஷ்யா செய்துள்ளதாக மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close