வங்கதேசத்தை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு!
Bangladesh corona causalities crosses 3000
டாக்கா:
வங்கதேசத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வங்க தேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.30 லட்சத்தை நெருங்குகிறது.
இந் நிலையில், வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 35 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் 16வது இடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.