fbpx
Others

17 காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

17 காவல்துறை அதிகாரிகள் பணி இட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல்துறையில் பணியாற்றும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண்,  பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள அபின் தினேஷ் மோடக்குக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னையில் ரெயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close