Others
ஶ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில் “ஶ்ரீ சத்திய சாய் ஆன்மிக உத்சவ் 2023”
கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள சத்திய நாராயணா மண்டபத்தில் முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை ஶ்ரீசத்தியசாய்மிர்புரிஇசைக்கல்லூரியில் பயின்ற முன்னாள்மாணவர்கள்திரு.சாய்பிரசாத் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசை விழாநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். இந்நிழ்ச்சி தினந்தோரும் மாலை 5மணி முதல் 8மணி வரை வரும் திங்கள் கிழமை வரை நடைபெறவுள்ளது. வரும் 01.01.2024 திங்கள் கிழமை மாலை ஶ்ரீ சத்திய சாய் விரதகல்பம் பூஜை நடைபெறவுள்ளது. மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சார்ந்த இசை கலைஞர்கள் வருகை தரவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட சத்திய சாய் நிறுவனத்தை சார்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.