GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
CBCID police enquiry in revathi
சென்னை:
பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய அளவில் இதற்கு கண்டனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் தற்போது தலைமை பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது பல முக்கிய விஷயங்களை அவர் விசாரணைக்குழுவிடம் கூறியதாக தெரிகிறது.