fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

அந்த 3 மாநிலங்களில் இருந்து வருகிறீர்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு!

Regulation for 3 state flight passengers issued by TN Government

சென்னை:

குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கி உள்ளன. பயணிகள் தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறு வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் ஆகும். இந்நிலையில் விமான பயணத்திற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

வியாபார ரீதியான 2  நாட்களுக்குள் வெளி மாநிலங்கள் சென்று திரும்புபவர்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது. வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கண்டிப்பாக இ பாஸ் அவசியம்.

குறிப்பாக குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் ஆகும் என்று தமிழக அரசு அறிவத்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close