fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!

Gudiyattam lockdown cancelled

குடியாத்தம்:

குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5-ஆயிரத்தை தாண்டி வருகிறது.

இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 21 -ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து,  24 -ஆம்  தேதி முதல் 31 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று இரவு குடியாத்தத்தில் நாளை (அதாவது இன்று ) முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close