fbpx
Others

பெரியகுளம்-சோத்துப் பாறை அணை பகுதியில் வனக்காப்பாளர் புவனேஸ்–அராஜகம்

தேனி மாவட்டம், பெரியகுளம் – சோத்துப் பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலர் ! செய்தியாளர் சென்ற இருசக்கர வாகன சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட வனக்காப்பாளர் புவனேஸ் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா ? தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள சோத்துப் பாறை அணை பகுதியில் அணையின் தன்மை மற்றும் நீர் இருப்பு விபரங்களை செய்தியாக சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி,செய்தியாளரை தடுத்து நிறுத்தி, ஒருமையில் பேசி அவர் சென்ற இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி அடாவடியில் வனக்காவலர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வழியாக அகமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மலை கிராம மக்களிடம் பணம் கொடுத்தால்தான் உள்ளே அனுமதி எனக்கூறி வனத்துறையினர் அப்பாவி மலைக்கிராம மக்களிடமும், ஜீப் ஓட்டுநர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் ,அடாவடி வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது ?  பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 100 நாட்களுக்கு மேலாக நிரம்பி வழிகின்ற செய்தியை சேகரிக்க சென்ற  போது சோத்துப்பாறை அணை சோதனை சாவடியில் பணியில் இருந்த புவனேஸ் என்ற வனக்காவலரிடம் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் முறையாக வனக்காவலரிடம் செய்தி சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறிய பின்பு கூட , நீ யாராக இருந்தாலும் எனக்கு பணம் கொடுத்தால் தான் உள்ளே அனுமதி என்று கூற, எவ்வளவு பணம் என்று செய்தியாளர் வனக்காவலரிடம் கேட்க, உங்களால் முடிந்ததைக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று வனக்காவலர் கூறியுள்ளார். செயலாளர் பணம் தர மறுத்துள்ளதால், செய்தியாளரை வனக்காவலர் புவனேஸ் ஒருமையில் பேசியுள்ளார். பின்னர் வனத்துறை அலுவலர்களிடம் தொலைபேசியில் பேசிவிட்டு அங்கிருந்து உத்தரவு கிடைக்க வாகனத்தின் சாவியைகொடுத்துள்ளார். இவரின் பணம் பறிக்கும் செயலுக்கு மேல் நிலை அதிகாரிகளும் உடந்தையா ? என்று எண்ணத்தோன்றுகின்றது. சோத்துப்பாறை அணைப்பகுதியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடமும் அரசு அனுமதியின்றி அடாவடி வசூல் செய்யப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு செய்தியாளரிடமே செய்தி சேகரிக்க செல்வதற்கு பணம் கேட்டு வனத்துறையினர் மிரட்டுகிறார்கள் என்றால் மலை கிராம மக்கள் அவர்களின் இல்லங்களுக்கு செல்வதற்கே பணம் கொடுத்தால் தான் செல்ல முடியும் என்பதற்கு இவை ஒரு முக்கிய சான்றாகும் !
பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம், வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூலில்(வழிப்பறியில்) ஈடுபட்டு வரும் வனக்காப்பாளர் புவனேஸ் என்பவர் மீது துறை ரீதியாக பணி நீக்க நடவடிக்கை மேற்கொண்டு. அப்பாவி பொதுமக்கள் மற்றும் மலைகிராம மக்களிடம், பணம்பறிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் , மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!!………………………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

 

Related Articles

Back to top button
Close
Close