fbpx
HealthRETamil News

5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை ! இதுவே முதல் முறை !!

சென்னையை சேர்ந்த 38 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு வரலாற்றில் முதல் முறையாக 5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.இதுவே முதல் முறையாகும்.

சென்னையை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ 38 வயதாகும் இவர் 10 வருடங்களுக்கு முன் 3.2 கிலோ எடையுடன் முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.பின்னர் தற்போது 5 கிலோ எடையுடன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதுவரை மருத்துவ வரலாற்றிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை 4.8 கிலோயுடையதாகும். தற்போது ஜெயஸ்ரீக்கு 5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையே வரலாற்றில் அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக பேசப்படும். மேலும் இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் இல்லாமல் சுகப்பிரசவம் மூலம் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று மருத்துவர் விஜயா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மருத்துவர் கூறுகையில் ‘ பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களே அதிக எடையுடன் கூடிய குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் ஆனால் தற்போது ஜெயஸ்ரீக்கு சர்க்கரை நோய் இல்லாமலே 5 கிலோ எடையுடன் குழந்தையை பெற்றெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் அவர் இருவர்களின் உடல் நிலையும் நன்றாக உள்ளது.’ என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close