Others
புழல் ஏரி-மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 2200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து இன்று (30.11.2023) புழல் ஏரியில் உள்ள நீர்வரத்து, உபரி நீர் வெளியேற்றம் மற்றும் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைஅலுவலர் களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.உடன் சார் ஆட்சியர் ( பொன்னேரி ) செல்வி.ஐஸ்வர்யா ராமநாதன் இ.ஆ.ப., பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு.கௌரிசங்கர், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் இருந்தனர்.