fbpx
Others

புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம்

புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் வைக்கவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் அரசுத்துறைகளில் 10,501 காலி பணியிடங்கள்உத்தரவிட்டார். புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று நன்றி தெரிவித்து சபாநாயகர் செல்வம் பேசியதாவது:- 8 நாட்கள் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 8 நாட்கள் நடந்தது. கூட்டத்தொடரில் 323 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 4 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொண்டனர். ரங்கசாமி படம் சட்டமன்ற கூட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சபையில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. பேசும்போது அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சரின் படம் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் வைக்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு சபாநாயகர் செல்வம் பேசினார்..

 

Related Articles

Back to top button
Close
Close