இந்தியாவில் கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : 62-ஆக உயர்வு
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் – 24-ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தரவை பிறப்பித்தது. அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவும், மக்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்பட்டு உள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா வைரஸால் பதித்தோரின் எண்ணிக்கை 2301-ல் இருந்து 2517-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56-ல் இருந்து 62-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாமுழுவதும் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும், கேரளா மூன்றாம் இடமும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த வைரஸின் தாக்கம் குறையுமா இல்லையா என்பதை தெரிவிக்கப்படவில்லை.