RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
ஒரே மேடையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா?மோடிக்கு ராகுல் காந்தி சவால்!

டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது ;
மோடி ஜி அவர்களே உங்களுக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா ? என்று மீண்டும் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா என்று பாஜக விற்கு சவால் விடுகிறேன். அவர் பயப்படுகிறார்.அவர் பயப்படவில்லை என்றால் என் சவாலை ஏற்பார். அவர் ஒரு கோழை மனிதர். 5 வருடங்களாக அவரை எதிர்த்து வருகிறேன். எனவே அவரை பற்றி நன்றாகவே தெரியும்.
மோடி என்ற பிம்பம் முடிவுக்கு வந்து விட்டது. தோல்வி பயம் மோடியின் கண்களில் தெரிகிறது. பேச்சில் உள்ள அளவிற்கு அவர் தைரியமான மனிதர் அல்ல என்று சீனா கண்டுபிடித்துவிட்டது என்று அவர் கூறினார்.















