Others
ஓ. பன்னீர்செல்வம் , டிடிவிதினகரன் சந்திப்பு …?
அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் பரப்புகள் நடந்துவர முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரனும்ஒருவரைஒருவர்சந்தித்துபேசியுள்ளனர்.அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகுதே.ஜ.கூட்டணிமுதல்வர்வேட்பாளராகஎடப்பாடிபழனிசாமியைஏற்றுக்கொள்ளமுடியாதுஎனத்தெரிவித்துகூட்டணியில்இருந்துவெளியேறினார் டிடிவி தினகரன். அதேபோல், ஓ. பன்னீர்செல்வமும் வெளியேறினார்.இந்தச் சம்பவங்கள் நடந்துவந்தபோதே, முன் அறிவிப்பு கொடுத்து, கடந்த 5ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான பணியை அடுத்த 10 நாளில் தொடங்க வேண்டும். பணி முடிவதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகலாம். ஒருவேளை அடுத்த பத்து நாளில் இந்தப் பணி துவங்கப்படவில்லை என்றால், நானே அந்தப் பணியைத் தொடர்வேன் என்றார். இதில் முரண்படும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பில் யாரையெல்லாம் கட்சியில் சேர்க்கலாம் என்பதை பொதுச் செயலாளரே முடிவு செய்யலாம் என்றார்.