fbpx
Others

தேர்தல் ஆணையம் பார்வைக்கு–பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு..?

தமிழ்நாடு – அனைத்து மாவட்டங்களிலும் நூறு சதவிகிதம் வாக்குகள் போடுவதற்கு ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்களும், பயிற்சிகளும் வழங்கிவரும் வேளையில்??? பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு ,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தேர்தல் நிலை அலுவலர்களின் அலட்சியம் !!! தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 21 வது வார்டு, பாகம் 112 ல் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு முறையாக வழங்காததால், மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் தங்களுக்கு ஓட்டு உள்ளதா ? இல்லையா ? என்பதே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வாக்குச்சீட்டு வழங்கும் பணியில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு , அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் வாக்கு சீட்டுகளை வழங்கிக் கொண்டு செல்கின்றனர். பிறருக்கு வாக்கு சீட்டு வழங்குவதே இல்லை …. கேட்டால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருக்கின்றனர். உடனடியாக வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்குச்சீட்டுகளை வழங்கவும் , வாக்குச்சீட்டுக்கள் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close