fbpx
RETamil News

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்

சேலம் – சென்னை  8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தும் வகையில் பொது மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிதாக நிலம் எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி சேலத்தில் முகாமிட்டு கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி 8 வழிச்சாலை சர்வதேச தரத்தில் நிறுவப்பட போவதாக பேசியுள்ளார். ஆனால் கடந்த 6 மாதகாலமாக மக்கள் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டமானது விவசாய நிலங்களை அழித்துவிடும் என்பதால் இந்த போராட்டம் மக்களால் நடத்தப்பட்டது. அதனால் இந்த இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது.ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர்.

ஆனால் பொது மக்களோ நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துவோம் என்று அனைவரும் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச்சாலை திட்டத்தை அமல் படுத்தக்கூடாது. விளைநிலங்களை பாதிக்கும் இந்த திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும் அதனால் மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 6 மாத காலமாக நடந்த போராட்டத்தால் இந்த 8 வழிச்சாலை திட்டதிற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் . இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close