தேனி -அல்லிநகரம் நகராட்சி நிர்வாக சீர்கேடு….?
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் ??? தேனி மாவட்டம் தேனி சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும் சாலையின் வலதுபுறம் கிருஷ்ணா பிராய்லர் எதிராக இருந்த வீட்டை இடித்து வைத்துள்ளதன் அருகில் கழிவுநீர் சாக்கடை ரோட்டில் சென்று கொண்டு இருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியல!!! மேலும் இந்த இடத்தில் நகராட்சி குடிநீர் தாராளமாக கழிவுநீர் சாக்கடையில் கலந்து செல்கிறது..… இந்த தண்ணீரை அடைக்காததால் குடிநீர் வீணாக சாக்கடையில் செல்லும் நிலை…..இதை இடித்து தரைமட்டம் ஆக்கிய வீட்டுக்காரர்களோ கண்டும் காணாது போல் உள்ளனர்…. இதனால் நகராட்சியின் குடிநீர் தான் வீணாகிறது…..இதை இந்த பகுதியின் கவுன்சிலர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது…. இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா???………………… யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன்,அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.