தேனியில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம்
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன்குறித்த ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப, முன்னிலையில் நடைபெற்றது, தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், மேலும் பணியாளர்களின் பணிப்பதிவேடு, பணி மூப்பு வரண்முறைப்படுத்துதல் போன்ற அலுவலக ரீதியான பணிகளை அலுவலர்கள் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார், இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஜ் டோங்கரே இ.கா.ப,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் மதுமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, உதவிஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, பாலசுப்ரமணியன் (பேரூராட்சிகள்) நகராட்சி ஆணையாளர்கள், தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணய நலக்குழுஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி…………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி