திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு.
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில்
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன்,வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்புரமணியன், ஊராட்சிமன்ற தலைவர்வைகைபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் இமாக்குலின், கோபால் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன், ஓட்டன்சத்திரம் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள்,
நிர்வாகிகள் பெருந்திரளாக ஓபிஎஸ்தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட ஆதரவு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்டகழகநிர்வாகிகள்,ஒன்றிய ,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அனைவரையும் பொன்னாடை போற்றி ஓபிஎஸ் வரவேற்றுப் பேசினார்.கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று,அடுத்தடுத்த கூட்டங்களில் பல்வேறு உண்மைகளையும் கட்சியின் வரவு செலவு விவரங்களையும் வெளியிடுவேன் என்றும்,பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் எனது பக்கமே உள்ளனர் என்றும் பேசினார்..நகரச் செயலாளர் அப்துல் சமது,அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம்,பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்,மாவட்ட பிரதிநிதிஅன்பு,
ஆகியோர் கலந்து கொண்டனர்.