தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42 வது நினைவுநாள்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று மே 24 ந் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்,தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை நாகராஜ்,செயலாலே எல்.சுந்தரலிங்கம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன்,மாவட்ட அமைப்பாளர் அயன்புரம் செல்வராஜ்,விருகை தொகுதி தலைவர் மணிராஜ்,மத்திய சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் நளினி மகேந்திரன்.இணைச் செயலாளர் ஆரோக்கிய ராணி பாப்பா மற்றும் கவிராஜ்,முனிராஜ்,மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.