Others
டாக்டர். தீபாசத்யன் இ.கா.ப SP .இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.04.2022 அன்று திருமால் (54) என்ற நபர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டார். கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் திரு . பிரபு அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், 27.04.2022 அன்று குற்றவாளி கைது செய்யப்பட்டார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்தமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.