fbpx
Others

ஜார்க்கண்டின் ராஞ்சி-பா.ஜ.க.மூத்தபெண்தலைவர்இன்றுகைது

வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்தவீட்டு வேலை செய்த பெண்ணுக்கு கொடூர சித்ரவதை; பா.ஜ.க. பெண் தலைவர் கைது பா.ஜ.க.பெண்தலைவர்இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். ராஞ்சி, ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்படி, ராஞ்சி நகரின் அர்கோரா போலீசார் பத்ராவை தேடி வந்தனர். போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் சீமா தப்பி செல்ல முயன்றுள்ளார். இதில், ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்ப முயன்ற சீமாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பழங்குடியின பெண்ணான சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் நடந்து உள்ளன. அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிவறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164ன் கீழ் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை சஸ்பெண்டு செய்துள்ளது. ராஞ்சி போலீசார் சீமா பத்ராவை கோர்ட்டில் இன்று ஆஜர் செய்ய உள்ளனர். இதன்பின்பு அவரை சிறைக்கு அழைத்து செல்வார்கள். வீட்டுக்கு வேலைக்கு வந்த இடத்தில், பழங்குடியின பெண்ணை கொடுமையாக சித்ரவதை செய்த, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான அவரது செயலால் அந்த பகுதி மக்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.

 

Related Articles

Back to top button
Close
Close