fbpx
Others

விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்த நயினார் நாகேந்திரன்….

அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்! தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் கடந்த ஐந்து வருடத்தில் மத்திய அரசு நமக்கு ஏதாவது தந்து இருக்கு என்று சொல்லி இருக்கிறாரா? இதுவரைக்கும் சொல்லியதில்லை. தூத்துக்குடி விமான நிலையம் 350 கோடி ரூபாய் திருச்சி விமான நிலையம் 650 கோடி ரூபாய் பதினோரு வந்தே பாரத் ரயில்கள். பட்ஜெட்டுக்கு முன்பு 11 மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் நான் பிரதமரை சந்தித்து வாங்கி வந்து உள்ளேன் என கூறியிருக்கிறாரா?ஏதாவது வேண்டுமென்று இவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களா? தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு இன்றுஇலவசமாககொடுக்கிறார்கள். தமிழகத்தில்திமுகஸ்டிக்கர்ஒட்டிஇன்றைக்குதாங்கள்கொடுப்பதாககூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லோருக்கும் வீடு கொடுக்கிறார்கள், பாரதப் பிரதமருடைய வீடு அதில் மத்திய அரசு பங்கு 60% திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னார்கள். சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். சொத்து வரியை 300 சதவீதம் உயர்த்தி உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். இன்றைக்கு 300 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியுள்ளார்கள். வீட்டு வரி உயர்வு என அனைத்தையும் கூட்டிவிட்டு எதுவுமே தரவில்லை எதுவுமே தரவில்லை என்று கூறுகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்புதமான முறையில் பட்ஜெட் தந்துள்ளார். ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் கனிம வளங்களை கண்டறிந்து அதை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் எனல் கூறியுள்ளனர். மருத்துவத் துறைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள். அதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை என்று பிரித்து கொடுப்பார்கள். ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.மகளிருக்காக மாவட்டம் தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். செமி கண்டக்டரை பொறுத்தவரை 40 ஆயிரம் கோடி ஒதுக்கிNainar Nagendran Takes Swipe at Vijay Says He Knows Nothing Dancing Amid State Crisis உள்ளார்கள். செமி கண்டக்டர் தான் உலக அளவில் பொருளாதாரத்தை கட்டமைக்கும் அதற்கு நாற்பதாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள், பின்னர் அதை பிரித்துக் கொடுப்பார்கள். பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒன்னுமே இல்லை, ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள். ஒன்னுமே இல்லாமல் போய்விடுவார்கள்.” என்றார். மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், “தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு தவெக மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். நடனமாடிக் கொண்டிருந்தால் நடனமாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?” என்றுதெரிவித்தார் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது.  தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, பாடகர் வேல்முருகன் இசை நிகழ்ச்சியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார். இந்நிலையில் விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

Related Articles

Back to top button
Close
Close