GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ரவுடிகளை பிடிக்க முயன்ற போது…! துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் பலி..! உ.பி.யில் பயங்கரம்!
Eight policemen killed in row over gangster shooter Vikas Dubey
கான்பூர்:
உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், சென்றனர்.
அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரவுடிகள் சுட்டதில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.