fbpx
Others

கொரோனாவால்தமிழ்நாட்டில்உயிரிழப்பு இல்லை

UP DATE NEWS

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 247 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 108 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 46 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் 23 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 23 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 354 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 1,676 பேர் உள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Related Articles

Back to top button
Close
Close