கார்கே–4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?
இந்த கடிதத்தின் நகலை மேற்கோளிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘அடுத்தவர்களை பலவீனப்படுத்துவதும் கடுஞ்சொற்களால் விமர்சிப்பதும்தான் காங்கிரசின் பாரம்பரியம். 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உறுதியான நீதித்துறை வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தங்களின் சுயலாபத்துக்காக அடுத்தவர்களின் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சி, நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதில்லை. அக்கட்சியை 140 கோடி மக்களும் நிராகரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தது யார்? அதனை உச்சநீதிமன்றம் ஏன் தடை செய்தது? மோடி அவர்களே, நீங்கள் தன்னாட்சி அமைப்புகளை உங்களிடம் சரணடையுமாறு மிரட்டுகிறீர்கள். உண்மையில் நீங்கள், நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து அரசியல் சட்டத்தை புண்படுத்தும் கலையில் வல்லவர். நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரஸ் கட்சியைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.